போராட்டம் கூறுவது என்ன? மஹிந்த தரப்பு கூறுவது என்ன

263 0

1454316425522kuutu_ethir_katchi_-9தனியார் பேருந்து சங்கங்களின் தொழிற்சங்க போராட்டமானது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையே வெளிப்படுத்துவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதிகள் சிலர், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விநாயாக மூர்த்தி முரளிதரன், திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்டவர்களை சந்திப்பதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றனர்.

இதன்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் எந்தவிதமான அடிப்படைகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், விநாயக மூர்த்தி முரளிதரன் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.