வவுனியாவின் தொன்மையை பேண ஆவணக்காப்பகம் திறந்துவைப்பு

328 0

vavuniya-kappavkamவவுனியா மாவட்டத்தின் தொன்மையை பிரதிபலிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள தொல்பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய ஆவணக்காப்பகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ் ஆவணக்காப்பகத்தில் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரங்கள், மட்பாண்டங்கள், உட்பட நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ,ரவீந்திரன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி மாவட்ட செயலாளர் என். கமலதாசன், வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராசா உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.