லலித், குகுன் வழக்கு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு

280 0

jaffna-courtsயாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல்போன முன்னிலை சோசலிசக்கட்சி உறுப்பினர்களாகிய லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லலித் மற்றும் குகன் காணமற் போன போது அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இல்லாத காரணத்தினால் இன்றைய வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் சார்பில் சட்டத்தரணி ருவான் கோக்கேன் ஆஜராகியிருந்தார்.