குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர மற்றும் உப பொலிஸ் பரிசோதகரான ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றமே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

