கல்முனை பிராந்திய கடற் பிரதேசங்களில் எண்ணெய் பரவல்

300 0

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை.

பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகி கடும் சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் விமானப்படை ஏனைய நாடுகள் இணைந்து குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இருந்த போதிலும் இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன