ஸ்ருட்காட் நகரில் புதிய பரதக்கலை வகுப்பு ஆரம்பமானது. – ஆசிரியர்.திருமதி துர்க்கா ராமேஸ்

1151 0

யெர்மனியில் இயங்கும் பரதநாட்டிய வகுப்புக்களை நிர்வகிக்கும் பாரதி கலைக்கூடத்தின் நிர்வாகத்தின் கீழ் பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின் பரதநாட்டிய வகுப்பு 22-08-2020 சனிக்கிழமை ஆரம்பமானது.

விநாயகர் சதுர்த்தி தினநாளன்று சிறிசித்திவிநாயகர் கோவிலில் விநாயகர் பூசையுடன் சலங்கை பூசையும் நடத்தப்பட்டது.ஸ்ருட்காட் நகரில் வாழும் தமிழ்ப்பிள்ளைகள் பரதக்கலை பயில சலங்கை பூசை செய்து சலங்கை அணிந்து பரதக்கலை பயில ஆரம்பித்தனர். மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் கற்றுக்கொண்டனர். தொடர்த்து ஒவ்வொரு சனிக்கிழமை களிலும் ஸ்ருட்காட் Feurbach நகரில் பரதக்கலை வகுப்புகள் நடைபெறும்.