கடந்த அரசாங்கத்தில் பழிவாங்கல்கள் மட்டுமே இடம்பெற்றது

250 0

கடந்த நான்கரை வருட காலத்திற்குள் பழிவாங்கள் மட்டுமே இடம்பெற்றதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏதாவது அரசாங்கத்தின் ஊடாக ஒரு நல்ல காரியம் மேற்கொள்ளப்பட்டால் அதன் பின்னர் வரும் அரசாங்கம் அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த நான்கரை வருட காலத்திற்குள் நாடு பின்னோக்கி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்