சிறிலங்காவில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை

304 0
சிறிலங்காவில் களனி தல்வத்த கொனவல பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (15) இரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

கொனவல பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியமையே இந்த கொலைக்கு காரணமாகும்.தாக்குதலில் காயமடைந்தவர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.கல்லுல்ல தோட்டம் மடுல்சீம பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் தொழில் தேடி தலைநகருக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபரை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களனி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.