முறி விவகாரம் – சுதந்திர கட்சியின் அறிக்கை ஜனாதிபதியிடம்

311 0

slfpமத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்து சிறிலங்கா சுதந்திர கட்சியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சுர் லசந்த அலகியவன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு குழு ஒன்றை நியமித்திருந்தது.

இந்த குழு தயாரித்த அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.