அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மனு

280 0

adikalarஅரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க கோரி அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் மனு ஒன்றை கையளித்தது.

கொள்ளுபிட்டியில் இருந்து இந்த இயகத்தினால் ஜனாதிபதி செயலகம் வரையில் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

அரசியல் கைதிகள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த இயக்கத்தின் இணைப்பாளர் எம். சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.