மக்கள் முறைப்பாடுகளுக்கு 119 க்கு மேலதிகமாக 1933 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

198 0

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை தெரிவிக்க 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக 1933 என்ற இன்னுமொரு தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது குறித்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு தெரிவிக்க முடியும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகளில் சுகாதார பிரிவும், பாதுகாப்புப்படையும் மிக அர்ப்பணிப்புடன் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலே வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொலிஸ் தலைமையகம் 1933 என்ற தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதுடன், இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டும் மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். இதன்போது குறித்த இலக்கத்திற்கு அதிகளவான அழைப்புகள் வருவதால் ஏற்படும் சிக்கல் நிலைமைகளை கருத்திற் கொண்டு, அதிகளவானோர் தொடர்புக் கொள்ளக் கூடிய வகையில் வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளை முழுமையாக பெற்றுக் கொள்ளும் நோக்கிலே மேலதிகமாக இன்னுமொரு தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸ் தலைமையக வெளியிட்டுள்ளது.