மனைவி மற்றும் மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்

212 0
மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்து மகளை கழுத்து நெறித்து கொன்ற நபர் அதன்பின்னர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை 3.40 அளவில் இடம்பெற்றதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதான ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவர் 28 வயதான தனது மனைவியையும் 3 வயதான தனது மகளையும் கொலை செய்துள்ளார்.

சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.