கணவன் வாள் வெட்டு – மனைவி, மகள்கள் இருவர் பலி

317 0

attackதிருகோணமலை கன்னியா கிளிகுஞ்சி மலையில் பகுதியில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கணவனினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 38 வயதான தாய் மற்றும் 8 மற்றும் 10 வயதுகளை உடைய பெண் பிள்ளைகளும் பலியாகினர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது, இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.