குளோரோகுயின் மருந்தால் கொரோனாவை தடுக்க முடியாது – தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம்!

237 0

கொரோனா வைரஸ் பரவலை குளோரோகுயின் “Chloroquine” என்ற மருந்தால் மாத்திரம் தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு செயலணி பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே உரிய மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி குளோரோகுயின் “Chloroquine”மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வைத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 5 இலட்சம் குளோரோகுயின் மாத்திரைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச தெரிவித்துள்ளார்.