O/L பரீட்சை பெறுபேறுகள் ஒத்திவைப்பு

228 0
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பரீட்சை பெறுபேறுகளை தயாரித்துக் கொள்ள தேவையான பணியாளர்களை இணைத்துக் கொள்ள முடியாமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

நிலவும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் தினம் அறிவிக்கப்படும் என சனத் பூஜித்த மேலும் தெரிவித்தார்.