நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு பங்குச் சந்தை மூடல்

211 0

கொழும்பு பங்குச் சந்தையை நாளை முதல் நாளை மறுதினம் திகதி வரை தினசரி பரிவர்த்தனைகளுக்காக திறக்காமல் இருக்க அதன் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 வரை நீட்டிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரி ரேணுக விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாளை 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.