ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்

228 0
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன்  நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி  செயலாளர் வைத்தியர் நவீன் த சொய்சா  தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.