புறக்கோட்டைப் பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை!

229 0

கொழும்பு, புறக்கோட்டையில் (Pettah) மொத்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் புறக்கோட்டையில் அமைந்துள்ள அனைத்து மொத்த விற்பனை நிலையங்களும் மீண்டும் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.