கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு

315 0

இன்றைய தினம் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் கொவிட் 19 கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 51 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 212 பேர் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.