பொருத்து வீடுகள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! சுமந்திரன்

642 0

sumanthiran-720x480இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சி செய்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ள அவர் சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை விடவும் குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்