ரணிலை தோற்கடிக்கும் ஒரே சக்தி மைத்திரி – டிலான் பெரேரா

370 0

d01d0d5ccc69aebda0a48fc326c6e7d7_xl2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பல முறை கோரிய போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், எப்படியாவது ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இணங்க வைக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க கூடிய தகுதியான நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.