கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் .
அத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியானது போலியானது செய்திகள் எனவும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திட்டமிட்டவாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளானது ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என்றும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

