பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இணைந்துச் செயற்பட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மஹிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாதென்பதாலேயே கோட்ட 19ஐ இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்