வடக்கு மீன்பிடி அமைச்சர் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் சந்திப்பு

294 0

mவட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மன்னாரில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரனின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.ஜேசுதாசன், மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிக்ட் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வடக்கில் நிலவுகின்ற மீனவர் பிரச்சினைகளான இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகைகள், தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் மற்றும் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகைகள் தொடர்பாகவும், இணைமுகாமைத்துவ அங்குரார்ப்பணம் தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

mm