விபத்தில் இளைஞன் ஒருவன் பலி

189 0

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.