இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் பலி

181 0

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய நகர் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பிரச்சினையின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (23) மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர் பலத்த காயங்களுடன் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.