தமிழர் நிலத்தை சூறையாடுவதில் முஸ்லீம்களும்?

316 0
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது. அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் இச் செயற்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் திருகோணமலை மூதூர் கிழக்கில் மாத்திரம் பழங்குடி மக்களின் விவசாய நிலங்கள் 2000 ஏக்கர் வரை 2010 பின்னர் பறிக்கப்பட்டு அக்கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கில் பாலக்காட்டுவெட்டை இப்போது இர்பான் நகராகவும், கோபாலபட்டனம் அறபாநகராகவும், வெந்தக்காட்டுவெட்டை, மலைமுந்தல், மாவடியூற்று ஆகிய கிராமங்கள் தாய்பூநகராவும் 2015, 2016 இல் பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.