அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபட நேர ஒதுக்கீடு!

268 0

அரை சொகுசு பஸ்களை மாலை  7 மணியிலிருந்து காலை 6 மணிவரை சேவையில் ஈடுபடுத்தவும் பகல் நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தாமல் இருக்கவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சரவையை தெளிவுப்படுத்தவும் பஸ் சேவை குறித்து அமைச்சரவைக்கு பத்திரத்தை சமர்ப்பிக்கவும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது 437 தனியார் அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.