பலபிட்டிய, வெலிவத்துகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) காலை 7 மணியளவில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 36 வயதுடைய சுனில் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

