இலங்கையிலுள்ள மாணவர்கள் 1200 மணித்தியாலங்களை மாத்திரமே கற்றல் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, முழுமையாக 5 நாள்கள் மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்பகிறது என்றும் தெரிவித்தார்.
உலகின் மற்றைய நாடுகளுன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள மாணவர்களே கல்விக்காக குறைந்தளவு நேரத்தைதை ஒதுக்குவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறிருக்கும்போது பரீட்டைகளால் மாத்திரம் அவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
பின்லாந்து போன்று கல்வியில் உயர் மட்டத்தில் இருக்கும் நாடுகள் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் திறனை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.