தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

287 0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டாலும் சின்னம் மாற்றப்படவில்லை எனவும், சின்னத்தை மாற்றுவதாயின் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.