மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்!

250 0
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தான் மின்சக்தி அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படும் என எதிர் கூறியதாக தெரிவித்துள்ளார்.