ரயில் சேவைகளில் மாற்றம்!

652 0

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் வார இறுதியில் காலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 இலக்க நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை சேவையில் ஈடுபடாது.

எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இதே நேரத்தில் இந்த ரயில் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் கண்டியில் இருந்து எல்ல ரயில் நிலையம் வரை காலை 7.40 க்கு சேவையில் ஈடுபடும் 1027 இலக்க ரயிலும், எல்ல ரயில் நிலையத்தில் இருந்து கண்டி ரயில் நிலையம் வரை பிற்பகல் 2.15 க்கு சேவையில் ஈடுபடும் 1028 என்ற குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலும் இதே நேரத்துக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட் கிழமை சேவையில் ஈடுபடும்.

இதேபோன்று மாத்தளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டை வரையில் காலை 6.30 க்கு சேவையில் ஈடுபடும் இலக்கம் 2026 என்ற ரயில் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை சேவையில் ஈடுபடாது.

எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இதே நேரத்துக்கு இந்த ரயில் சேவையில் ஈடுபடும்.