கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

268 0

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக (கோபா) லசந்த அழகியவண்ண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு 16 உறுப்பினர்களை நியமித்தது

இவ்வாறு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அமைச்சர்களான பவித்திரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க ரோஹித்த அபேகுணவர்த்தன, லசந்த அழகியவண்ண, ஷெஹான் சேமரசிங்க, சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பாலித ரங்க பண்டார, நிரோஷன் பெரேரா, அலிசாஹிர் மௌலானா, புத்திக பத்திரன, எஸ்.சிறிதரன், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.