எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியை சீர்குலைக்க சிலர் முனைவதாக அவருக்கு ஆதரவான ஐ.தே.க.உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதாவது ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் குழுவே இந்த நாசவேலை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக சஜித் பிரிவு கூறுகின்றது.
தற்போது புதிய கூட்டணி மற்றும் அக்கூட்டணியின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்ய சஜித்தின் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் யானை சின்னத்தின் கீழ் அடுத்த தேர்தலில் போட்டியிட ரணில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 5 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த கூட்டத்திலேயே புதிய கூட்டணியின் பெயர் மற்றும் கையொப்பம் குறித்து அறிவிக்க சஜித் கட்சி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.