ரிசாட்டின் சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு

262 0

 

காணி மோசடி குறித்து கைதுசெய்ப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன் விளக்கமறியல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 78 ஏக்கர் காணி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிஃப்கான் பதியுதீன் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் புலனாய்வுத் துறையினால் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேலதிக நீதிவான் ரிஃப்கன் பதியுதீனை பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.