காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வீரவன்சவும் பொறுப்பு!

257 0

 “வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், காணாமலாக்கப்பட்டோரை தேடித்தரும்படி கோரி நடத்தும் போராட்டம் ஆயிரம் நாட்களைத் தாண்டி மேலும் மாதங்களால் விரிவடைந்து செல்லும் இக்காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரென எவரும் இல்லை எனவும், அப்படி யாராவது காணாமலாக்கப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால கடத்திச் செல்லப்பட்டவர்களாக இருக்கக்கூடுமெனவும், அவர்கள் இறந்திருக்கலாமெனவும் சிங்கள  பேரினவாத ஜனாதிபதியால் கருத்துவெளியிடப்பட்டிருந்தது.

அதையடுத்து சில நாட்களில் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் காணாமல் போனோரென எவருமில்லை எனவும் காணாமல்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறவேண்டிய தேவை ராஜபக்சக்களுக்கு இல்லை எனவும் தேவையானால் காணாமல்போனோரை மண்ணுக்குள் போய் தேடும்படியும் திமிர்தனமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள் தான் தேடவேண்டும் எனத் திமிர்தனமாகச் சொன்ன விமல் வீரவன்சவுக்கு, அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் விமல் வீரவன்ச நன்கு அறிந்திருப்பார். எனவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ராஜபக்சக்கள் மட்டுமல்ல,விமல் வீரவன்சவும் பொறுப்புக் கூற வேண்டும்”