வடமராட்சியில் அதிரடிப்படை முற்றுகை.!

258 0

வட தமிழீழம் , யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு பகுதியில் அதிரடிப்படை முற்றுகை.
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட  சிங்கள பொலிஸார் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது 52 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து 32 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சிங்கள பொலிசார் மற்றும்  சிங்கள பேரினவாத  அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து,  நேற்று  பிற்பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதன்போதே வீட்டில் இருந்து 32 கிலோகஞ்சா மீட்க்கப்பட்டதுடன் 52 வயடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் சிங்களப்பொலிசார் மேலதிக விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்தசந்தேக நபரையும் சான்றுப்பொருளையும் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் சிங்கள பொலிசார் தெரிவித்துள்ளனர்.