திருகோணமலையில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!

276 0

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25, 30, மற்றும் 40, 45, வயது உடையவர்கள் எனவும் கந்தளாய், மாத்தறை மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.