மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் !

267 0

இலங்கையின் 72 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (04) காலை 8 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

அதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததை அடுத்து முதலில் தமிழிலும் பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டு தொடர்ந்து சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.

அத்தோடு மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.