சிறிலங்காவின் சுதந்தின தினத்தில் யாழில் 17 பேர் விடுதலை: விடுதலையின்றி அரசியல் கைதிகள்

292 0

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறிலங்கா ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். சிறைச்சாலையிலிருந்து பெண்ணொருவர் உட்பட 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்கள் எனவும், அதில் நான்கு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.