கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

224 0

கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

83 வயதுடைய பள்ளிவாசல்துறை பிரதேசத்தை சேர்ந்த வயோபதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தலைப்பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.