பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழு-பந்துல

215 0

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த குழு மாணவர்களில் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இரண்டுவார காலத்திற்குள் தமது பரிந்துரைகளை முன் வைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.