பாலத்தின் கீழ் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

236 0

மகாவலி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹெபரவ   நிப்போன் நட்பு பாலத்தின் கீழ் மணல் மேடொன்றில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனித எச்சங்கள் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் ஒன்றின் ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட பின்னர் அகற்றப்பட்ட மனித எச்சங்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அது தொடர்பில் குறித்த பணியாளர்கள் கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த தினம் பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதன்போது குறித்த மனித எச்சங்கள் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மனித எச்சங்களை மகியங்கனை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.