சம்பிக்க ரணவக்கவின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு!

223 0

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரின் சாரதி துசித திலும் குமார கொழும்பு நீதவான் முன்னிலையில் இரகசிக வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் துசித திலும் குமார என்ற சந்தேகநபர் கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.