உயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொடவுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி

263 0
உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை இன்று வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச 28 ஆம் திகதி முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடமையாற்றி வருகின்றார்.

இதேவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி காலமானார்.

காலஞ் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.