சுற்றுலாத் துறை பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண காலம்

215 0

சுற்றுலா பஸ்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான (Leasing) தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாட்டு சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையை வழங்குவதற்காக 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 95 சதவீதமானவை தனியார் தொழில்துறையினருக்கு உட்பட்டதாகும்.

உயிர்த்த ஞயிறு தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலா தொழில்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டதுடன். இத் துறையில் ஈடுபட்டிருந்த பஸ் உரிமையளர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

குத்தகை தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் சில பஸ்கள் குத்தகை நிறுவனங்களினால் பொறுப்பேற்க்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமக்கு நிவாரண காலமொன்றை வழங்குமாறு இத் துறையைச் சேர்ந்தோர் கடந்த அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இந்த பஸ் உரிமையாளர்கள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு அமைவாகவே இந்த குத்தகைக்கான தவணைப் பணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலமென்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.