ஐதேக தலைமைத்துவம் யாருக்கு – முடிவின்றி நிறைவடைந்த கூட்டம்

215 0
தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை சிறிகொத்தவில் இடம்பெற்றது.

(பின்னிணைப்பு – 8.57 pm) இதேவேளை, கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்த வார ஆரம்பத்தில் கட்சி தலைமைத்துவம் குறித்து முடிவு ஒன்றை எடுப்பதற்கான சந்திப்பு ஒன்றி ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.