புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (10) புத்தளம் பகுதியில் வீடொன்றை சோதனை செய்த போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 420 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் ரக போதைப் பொருள் என்பன மேலதிக விசாரணைக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

