சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

327 0

பெளர்ணமி தினத்தான நேற்று (10) தலவாகலை நகரில் சட்டவிரோதமான முறையில் அதிகூடிய விலையில் மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று மாலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

தலவாகக்லை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 06 முழு மதுபான போத்தல்களும் 43 சிறிய மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்க்கு தலவாக்கலை பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.